சிறுவன் சுஜித் தாய் மயங்கி விழுந்தார்..! 15 மணி நேரத்திற்கு மேலாக நடக்கும் மீட்பு பணி ..!

Default Image

திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான் அந்த சிறுவனை மீட்பு படையினர் 15 மணி நேரத்திற்கு மேலாக மீட்க மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த குழந்தையின் பெற்றோர் தங்கள் சொந்தமான தோட்டத்தில் ஐந்து வருடத்திற்கு முன் போர்வெல் தோன்றியுள்ளனர். ஆனால் ஆழ்துளை கிணறை நான்கு வருடத்திற்கு முன்பாகவே மூடியுள்ளன.
தற்போது தமிழகத்தில் மழை பெய்து வருவதால் அந்த ஆழ்துளை கிணற்றில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை 05.40 மணிக்கு சுஜித் ஆழ்துளை கிணற்றில் 26 அடியில் இருந்த நிலையில் தற்போது 70 அடிக்கு சென்றுவிட்டார். சிறுவன் கீழே சென்றதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சுஜித் தாய் கலாமேரி  திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தன் மகனை நினைத்து கலாமேரி தொடர்ந்து அழுது வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்