14 மணி நேரமாக தொடர் மீட்பு பணி..! 70 அடி சென்ற சிறுவன்..!

Default Image

திருச்சி மாவட்டத்தில் நடுப்காட்டுபட்டி கிராமத்தில் நேற்று மாலை 05.40 மணிக்கு சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தொடர்ந்து 14 மணி நேரமாக விடிய விடிய மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
27 அடியில் இருந்த இந்த சிறுவன் 68 அடி ஆழத்திற்கு சென்று இருந்த நிலையில் தற்போது 70 அடிக்கு சென்று உள்ளார்.ஆழ்துளை கிணற்றில் உள்ள சிறுவருக்கு தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் சிறுவன் சுர்ஜித் மூச்சு விடுவதில் எந்த வித சிரமம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய மீட்பு படையினர் இன்னும் சிறிது நேரத்தில் வர உள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் மத்தியபிரதேசத்தில் 4 வயது சிறுவன் ஒருவன் 110 அடியில் இருந்து 35 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்