ஐஎன்எஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் ! மறுஆய்வு செய்யக் கோரி சிபிஐ மனு

Default Image

ஐஎன்எஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது  செய்தனர்.இதனை தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால்  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ கைது செய்தது தொடர்பாக சிதம்பரம் தரப்பில் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கில் சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில் .சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
தற்போது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரம் திகார் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்