ஆழ்துளை கிணற்றில் தவிக்கும் குழந்தை 5 மணி நேரமாக நடக்கும் போராட்டம்..!

Default Image

திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுபட்டியில் ஒரு வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.  5 மணி நேரத்திற்கு மேலாக மீட்கும் பணியில் நடைபெற்று வருகிறது.
குழந்தை 26 அடியில் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது. குழந்தை சுவாசிக்க ஆக்ஸிஜன் 2 சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குழந்தை மீட்கப்பட்ட உடனே சிகிச்சை எடுப்பதற்கு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் குழந்தை நிலையை பார்த்த  மருத்துவ குழுவினர் குழந்தை சுவாசிப்பதில்  பிரச்சினை இல்லை என கூறியுள்ளனர். குழந்தை நன்றாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்