தேர்தலில் பின்னடைவு..! பாஜக தலைவர் பதவி ராஜினாமா..!

Default Image

ஹரியானாவில் இன்று காலை முதல் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஹரியானாவில் பாஜக காங்கிரஸ் இடையே போட்டி நிலவி வருகிறது.
பாஜக 36 இடங்களையும் , காங்கிரஸ் 31 இடங்களையும் மற்றும்  ஜனநாயக ஜனதா கட்சி 11 இடங்களையும் பெற்று உள்ளது. இந்நிலையில் எளிதாக ஆட்சி அமைக்க பாஜக எதிர்பார்த்த நிலையில் தற்போது கூட்டணி அமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
டொஹனா தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் சுபாஷ் பரலா 22,000 வாக்குகள்  பின்னடைவை சந்தித்தார். ஜனநாயக ஜனதா கட்சி வேட்பாளர் தேவேந்திர சிங் முன்னிலையில் உள்ளார். இந்த பின்னடைவு காரணமாக சுபாஷ் பரலா தன்னுடைய பதவி ராஜினாமா செய்தார்.ஹரியானா மாநிலத்தில் 90 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்