பாதியிலே போன நடால் … ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் என்ன நடந்தது ?
உலகின் முன்னணி வீரரான ரபேல் நடால் காயம் காரணமாக ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் போட்டியில் இருந்து விலகினார்.
குரோஷியாவின் மரின் சிலிக்கை எதிர் கொண்ட நடால், ஆட்டத்தின் பாதியிலேயே காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டார்.
கடும் வலியை சகித்துக் கொண்டே விளையாடிய நடால் மேற்கொண்டு தொடர முடியாததால் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதன் மூலம் மரின் சிலீக் வெற்றி பெற்று 2 வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார். சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நடால் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிச் சுற்றுவரை முன்னேறி தோல்வியை சந்தித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …