திமுக எம்.பி. கனிமொழி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

Default Image

இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டுவது, தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்துதல், மத நம்பிக்கைகளை அவமதிப்பது, உள்நோக்கத்தோடு மத உணர்வுகளைப் புண்படுத்துவது, அமைதியை சீர்குலைக்கும் விதமாக உள்நோக்கத்தோடு அவமதிப்பது, பொதுமக்களிடையே கலகத்தைத் தூண்டும் வகையில் கருத்து கூறுவது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் திமுக எம்.பி. கனிமொழி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் திருச்சியில் நடைபெற்ற நாத்திகர் மாநாட்டில் பேசிய கனிமொழி, திருப்பதி ஏழுமலையானுக்கே சக்தி இருக்கும்போது அவரது உண்டியலுக்கு எதற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு என குறிப்பிட்டு பேசியதாக, தெலுங்கானா கரீம் நகரைச் சேர்ந்த பா.ஜ.க. மாவட்டத் தலைவர் பெத்தி மெஹந்தர் ரெட்டி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். தமது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறிய வழக்கை விசாரித்த கரீம்நகர் மாவட்ட நீதிமன்றம், வழக்குப் பதியுமாறு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, திரீடவுன் காவல்நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டுவது, தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்துதல், மத நம்பிக்கைகளை அவமதிப்பது, உள்நோக்கத்தோடு மத உணர்வுகளைப் புண்படுத்துவது, அமைதியை சீர்குலைக்கும் விதமாக உள்நோக்கத்தோடு அவமதிப்பது, பொதுமக்களிடையே கலகத்தைத் தூண்டும் வகையில் கருத்து கூறுவது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்