தொகுதியை விட்டு வெளி நபர்கள் வெளியேற வேண்டும்-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

Default Image
இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியை விட்டு வெளி நபர்கள் வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.  
தமிழகத்தில் உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில்  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவுபெறுகிறது. வெளி நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவித்தார். இன்றைக்குள் இரண்டு தொகுதிகளுக்கும் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங்கும் பணி முடிவடையும் என்றும் தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்