ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ! சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் செய்தனர்.இதனை தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தரப்பில் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் இன்று இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது. சிபிஐ, சிதம்பரம் தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.