INDvsSA: 3-வது டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர் விலகல்..!

Default Image

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே புனேவில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 601 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.இதைத்தொடர்ந்து இறங்கிய தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 275 ரன்கள் எடுத்து அனைத்து இழந்தது.
இதை தொடர்ந்து  இந்திய அணி ,தென் ஆபிரிக்க அணிக்கு  பாலோ ஆன் கொடுத்தது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 189 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் போது இரண்டாவது நாள் ஆட்டத்தில் தென்ஆபிரிக்கா வீரர் கேசவ் மஹாராஜுக்கு ஃபீல்டிங் செய்யும்போது தோள்பட்டையில்  காயம் ஏற்பட்டது. அதை பொருட்படுத்தாமல் முதல் இன்னிங்ஸில் 9 வது விக்கெட்டுக்கு நிலைத்து நின்று 72 ரன்களை குவித்தார்.
இரண்டாவது இன்னிங்ஸிலும் முடிந்தவரை போராடி 22 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்நிலையில் போட்டிக்கு பிறகு ஸ்கேன் செய்து பார்த்த போது அவருக்கு ஏற்பட்ட காயம் 3-வது போட்டிக்குள் சரியாவதற்கு வாய்ப்பில்லை என கூறியதால் மஹாராஜ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜார்ஜ் லிண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசி மற்றும்  3-வது டெஸ்ட் போட்டி வருகின்ற 19-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
p chidambaram health
Lucknow Super Giants won
Saidai duraisamy
Carlsen Anna Cramling
Kolkata Knight Riders vs Lucknow Super Giants
tamilisai tvk vijay