தமிழக அரசியல் கட்சிகள் மக்களை பணம் கொடுத்து தரம் தாழ்த்திவிட்டன..
சென்னை ஆவடி அருகே தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 41 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்து, மக்களை தரம் தாழ்த்திவிட்டதாக, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி வேதனை தெரிவித்துள்ளார்.
இதில் கோபால்சாமி கலந்து கொண்டு, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் வாக்குக்கு பணம் எங்கே என்று கேட்டு வாங்குபவர்கள் இருப்பதாக கூறினார்.
தேர்தலில் பண பலத்தை ஒடுக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், கோபாலசுவாமி தெரிவித்தார். ஓட்டுக்கு பணம் கொடுத்து அரசியல் கட்சிகள், தமிழக மக்களை தரம் தாழ்த்திவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …