ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையால் எம்எல்ஏ இன்பதுரை, துன்பதுரை ஆகிவிட்டார்- மு.க.ஸ்டாலின்

Default Image

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையால் எம்எல்ஏ இன்பதுரை, துன்பதுரை ஆகிவிட்டார் என்று திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் பேசினார்.அவர் பேசுகையில், விரைவில் உள்ளாட்சி தேர்தல் என்பது “வரும் ஆனால் வராது” என்ற திரைப்பட வசனம் போல் இருந்து வருகிறது. திமுக என்பது ஜனநாயக கட்டமைப்பு கொண்ட கட்சி. பிற கட்சிகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஊக்கப்படுத்த ஆட்கள் இல்லை, ஆனால் திமுகவில் அந்த நிலை இல்லை.
சூழ்ச்சி மூலமாகத்தான் அதிமுக வெற்றி பெற்றது. முறையாக தேர்தல் நடந்திருந்தால் இந்த நேரம் திமுக ஆட்சியில் இருந்திருக்கும் .ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையால் எம்எல்ஏ இன்பதுரை, துன்பதுரை ஆகிவிட்டார்.நீதிமன்ற மற்றும் இடைத்தேர்தல் தீர்ப்பிற்கு பிறகு நாங்குநேரி, விக்கிரவாண்டி, ராதாபுரம் என 3 சட்டமன்ற உறுப்பினர்களை திமுக கூட்டணி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்