நெல்லை வீரத்தம்பதியை அரிவாளால் தாக்கி நடைபெற்ற கொள்ளை முயற்சி! குற்றவாளிகள் இருவரும் பிடிபட்டனர்!

Default Image

திருநெல்வேலி மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்னர், கடையநல்லூர், கல்யாணிபுரத்தில் வசித்து வரும் சண்முகவேல் – செந்தாமரை எனும் வயதான தம்பதியினரை இரு கொள்ளையர்கள் அரிவாளால் தாக்கி வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.
ஆனால் அந்த வயதான தம்பதியினர் துணிச்சலுடன் போராடி அவர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தை பலரும் பாராட்டினர்.மேலும், அவர்களுக்கு சுதந்திர தினத்தன்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீரதீர செயல்களுக்கான தமிழக அரசின் விருதும் வழங்கி கௌரவித்தார்.
இந்த வழக்கை தீவிரமாக காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் விசாரித்து வந்தார். இந்த தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர், அரிவாளால் தாக்கிய இருவரையும் காவல்துறையினர் பிடித்துள்ளார். அந்த கொள்ளையர்கள் பெயர் பாலமுருகன், பெருமாள் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்