4 நாட்கள் தொடர் விடுமுறை ! ஆயுத பூஜையை முன்னிட்டு முன்பதிவு தொடக்கம்

Default Image

ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு தொடங்கியது.
வரும் 7 மற்றும் 8 ஆம் தேதி ஆயுதப்பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது.இந்த இரண்டு நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் அதற்கு முந்தைய நாட்களான 5-ஆம் தேதி,6-ஆம் தேதியும்  சனி, ஞாயிறு  என்பதாலும் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினம் ஆகும். இந்த விடுமுறை தினங்களையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் .அந்த வகையில் இந்த முறையும் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து வெளியூர் செல்வோருக்கான சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்