பேருந்தை முந்தி செல்ல முயன்ற மாணவர்கள் உயிரிழப்பு..!

Default Image

தூத்துக்குடி, சாந்தி நகரைச் சேர்ந்த மணி சங்கர், அஜித் மற்றும் அவர்களது நண்பர்கள் உள்ளிட்ட 6 பேர், 3 இருசக்கர வாகனத்தில் தசரா திருவிழாவுக்காக மாலை அணிவதற்காக குலசேகரப்பட்டினம் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் ஆறுமுகநேரி அருகே சென்றபோது, முன்னால் சென்ற ஆம்னி பேருந்தை வண்டி ஓட்டிய மணிசங்கர் முந்திச்செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த மினி லாரியுடன் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.

இதில் மணி சங்கர் (18) சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் வந்த அஜித்தை படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்து, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படடார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்