சபரி மலை ஐயப்பன் கோவிலில் மூன்று வகையான முன்பதிவு மாற்றம் ! தேவசம் போர்டு அறிவிப்பு !

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் பல மாநிலங்களில் இருந்து வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கார்த்திகை மாதம் சபரி மலை சீசன் தொடங்க இருக்கிறது.இந்நிலையில் சபரி மலை பயணம் குறித்து மூன்று விதமான முன்பதிவுகள் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது அந்த முன்பதிவு ஒரு விதமான முன்பதிவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்ம குமார்  இது  குறித்து பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.”சபரி மலைக்கு வரும் பக்தர்கள் நிலக்கல்லில் இரங்கி ,பின்னர் கேரள அரசு பேருந்தில் பம்பை சென்று திரும்ப வேண்டும் என்று கடந்த சீசனில் அறிவிக்க பட்டிருந்தது.

தற்போது கேரள நீதிமன்றத்தில் புதிய உத்தரவு படி பக்தர்களின் வாகனங்கள் பம்பை வரை செல்லலாம் என்றும் இதனால் பயணம்,முன்பதிவு வழிபாடு முதலியவைகளை ஒரே இடத்தில்  முன்பதிவு செய்வது குறித்து ஆலோசனை செய்ய பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சபரிமலை வரும் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.