என் நம்பருக்கே போன் பண்ணி நீ செத்துட்டியானு கேக்குறாங்க! பிரபல நடிகை வருத்தம்!

Default Image

நடிகை ரேகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கடலோர கவிதைகள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகர் ஜீவி பிரகாசின் 100 பெர்சன்ட் காதல் என்ற படத்தில் தாயாராக நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர், சில நாட்களாகவே அவர் இறந்துவிட்டதாக செய்திகள் பரவி வருகிறது. எனக்கு ஒன்றும் இல்லை. நான் நன்றாக தான் இருக்கிறேன். சில யுடியூப் சேனல்கள் வருமானம் பார்க்க இப்படி வதந்தியை பரப்புகிறார்கள். இது எங்க போய் முடியும் என்று தெரியவில்லை. சிலர் எனது நம்பருக்கே போன் பண்ணி, நீ செத்துட்டியா என்று கேக்குறாங்க. இந்த சம்பவம் அவரை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
ramadoss
Punjab won the toss and elected to field
Rajinikanth
geetha jeevan About Magalir Urimai thogai