ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Default Image

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு ஒத்திவைத்துள்ளது  டெல்லி உயர்நீதிமன்றம்.

ஐஎன்எக்ஸ் வழக்கில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர்  சிதம்பரம் தரப்பில் நீதிமன்ற காவலில் வைத்ததற்கு எதிராகவும் ,சிபிஐ கைதுக்கு எதிராகவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நேற்று  சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன்மனு மீது  விசாரணை நடைபெற்றது.அப்போது வழக்கினை இன்று விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.பின்னர் இன்று நடைபெற்ற விசாரணையில், சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு ஒத்திவைப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்