10-வது நாளாக கன்னியாகுமரியில் தொடரும் போராட்டம் !

Default Image

கன்னியாகுமரி மாவட்டம் தான் ஒகி புயலால் அதிகம் பாதிக்கபட்ட மாவட்டம் ஆகும்.எனவே இன்னும் அதன் பாதிப்பில் இருந்து மீளாத காரணத்தால் குமரியில் போராட்டம் நடத்திவருகின்றனர் .
கன்னியாகுமரி மாவட்டத்தில்  ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும், குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. புலியூர்க்குறிச்சி பகுதியில்  10 வது நாளாக விடிய விடிய போராட்டம்  தொடர்ந்தது. இந்த சத்தியாகிரக போராட்டத்தில் விவசாயிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
ஓகி புயலால் பாதிப்புகள் ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் புயல் பாதிப்புகளிலிருந்து இன்னும் மீளாமல் உள்ளனர். பேரிடர் பாதித்த மாவட்டமாக கன்னியாகுமரியை அறிவிப்பதன் மூலம் குறைந்தபட்சம் நிவாரணம் ஆவது பெற முடியும் என விவசாயிகள் கருதுகின்றனர்.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்