விருதுநகரில் கவிஞர் வைரமுத்துவின் உருவப்படத்தை எரித்து ஆர்பாட்டம்!

Default Image

கவிஞர்  வைரமுத்துவுக்கு எதிராக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவரது  உருவப்படத்தை எரித்து 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து, ஆண்டாள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதாக புகார் எழுந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பபட்டுள்ளது.
இந்நிலையில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கே வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, ராமனுஜ ஜீயர் சுவாமிகள் தலைமையில் 200க்கும் மேற்ப்பட்டோர் ஆண்டாள் கோயில் முன்பு, வைரமுத்து படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்