வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்த பெண்ணை வீட்டின் உரிமையாளர் மற்றும் மகன் செய்த கொடுமை..!

Default Image

டெல்லியை சேர்ந்த மஞ்சு கோயல் (44) விதவையான இவர் அங்குள்ள ஒரு வீட்டில் 6 மாதங்களாக வாடகைக்கு வசித்து வருகிறார். அங்குள்ள சில வீடுகளில் வேலை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மஞ்சு வசிக்கும் வீட்டின் உரிமையாளர் சதீஷ் பஹ்வா தனது வீட்டிலிருந்து மஞ்சு ரூ. 3,00000 திருடியதாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து சதீஷ் பஹ்வா மற்றும் அவரது மகன் பங்கஜ் இருவரும்  சேர்ந்து மஞ்சுவை கடுமையாக  தாக்கினர்.அதில் மஞ்சு படுகாயம் அடைந்துள்ளார்.

பின்னர் மஞ்சு சகோதரர் முகேஷுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உனது சகோதரி எனது வீட்டில் திருடி விட்டார். அதனால் அவரை அடித்து உள்ளோம்  எனக் கூறினார். தகவலறிந்து அங்கு வந்த மஞ்சுவின் சகோதரர் படுகாயமடைந்த மஞ்சுவை வீட்டுக்கு கொண்டு சென்றார். பின்னர் மருத்துவர் வீட்டுக்கு வருவதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து முகேஷ் கூறுகையில் , சதீஷ் மற்றும் அவரது மகன் பங்கஜ் மட்டும் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து எனது  சகோதரியை அடித்துக் கொன்று விட்டார்கள் மேலும் சகோதரியிடம் இருந்து 60,000 பணத்தை பிடுங்கிக் கொண்டார்கள் என கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார்  வழக்குப்பதிவு செய்து சதீஸ் மற்றும் அவரது மகனை கைது செய்துள்ளனர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்