டி.வி பார்க்கும் போது வீட்டில் நுழைந்த சிறுத்தை அதிர்ந்து போன தம்பதி..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சோனாரா நகரை சார்ந்த தம்பதி எட்வர்ட் மற்றும் கேத்தி இவர்கள் இருவரும் ஒரு வாரத்திற்கு முன் கதவைத் திறந்து வைத்துவிட்டு டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் வீட்டில் இருந்து வினோதமான சத்தம் ஒன்று கேட்டது. இதையறிந்த தம்பதியினர் எங்கிருந்து சத்தம் வருகிறது என பார்க்க தொடங்கினர். அப்போது சிறுத்தை ஒன்று வீட்டில் உலாவிக் கொண்டிருந்தது. இதை பார்த்த இருவரும் அலறினர்.

இவர்களின் சத்தத்தை கேட்ட சிறுத்தை கழிவறைக்குள் ஓடி விட்டது. உடனே அவர்கள் கதவை பூட்டி விட்டனர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் கழிவறையில் இருந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி கூண்டில் பிடித்து காட்டுக்குள் விட்டனர்.

author avatar
murugan