நாங்குநேரி தொகுதிக்கு மூன்று துணை தேர்தல் அதிகாரிகள் செயல்படுவார்கள்-நெல்லை ஆட்சியர்

Default Image

நாங்குநேரி தொகுதிக்கு மூன்று துணை தேர்தல் அதிகாரிகள் செயல்படுவார்கள் என்று நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தெரிவித்துள்ளார். 

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்த நிலையில் இன்று நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள்.அப்பொழுது  நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் கூறுகையில், நாங்குநேரி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் துறை அதிகாரி நடேசன் செயல்படுவார்.தொகுதிக்கு மூன்று துணை தேர்தல் அதிகாரிகள் செயல்படுவார்கள் என்று தெரிவித்தார். 

மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் கூறுகையில்,நாங்குநேரி தொகுதியில் உள்ள 299 வாக்குச்சாவடிகளில் 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்