லாட்டரி விற்பனை மூன்று திருக்கனூரில் பேர் கைது

திருக்கனூர் வணிகர் வீதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.திருக்கனூர் வணிகர் வீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்பனை செய்து வருவதாக திருக்கனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர்கள் நியூட்டன், குமார் நேற்று காலை 10:30 மணிக்கு லாட்டரி சீட்டு விற்றவர்களை கைது செய்தனர்.விசாரணையில், அவர் கள் திருக்கனூர் தேவநாதன் நகரை சேர்ந்த லட்சுமி நாராயணன், 51; திருக்கனூர் வணிகர் வீதியை சேர்ந்த ஏழுமலை, 42; விழுப்புரத்தை சேர்த்த பிரேம்குமார், 38; என தெரியவந்தது.மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 மொபைல் போன், ரூ.5 ஆயிரம், லாட்டரி சீட்டு கள் பறிமுதல் செய்தனர்.

author avatar
Castro Murugan

Leave a Comment