புதிய அபராதங்களுக்கு கடும் எதிர்ப்பு!நாளை நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்!

Default Image

நாடு முழுவதும் லாரிகள் நாளை ஒருநாள் (செப்டம்பர் 19-ஆம் தேதி ) ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளது.

புதிய மோட்டார் வாகனச் சட்டம் நாடு முழுவதும் கடந்த 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது.அபராதங்களும் பன் மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையியில் இதனால் நாடு முழுவதும் லாரிகள் நாளை ஒருநாள் (செப்டம்பர் 19-ஆம் தேதி ) ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளது.அபராத தொகையை குறைக்க வலியுறுத்தியும்,லாரி தொழிலை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக் நடைபெறுகிறது. இதனால் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயங்காது.இந்த ஸ்டிரைக்கில் அனைத்திந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மற்றும் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு அளித்துள்ளது .இந்த ஸ்டிரைக்கில் சுமார் 45 லட்சம் லாரிகள் இயங்காது என்று தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்