தமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான்,யாருக்கும் தாழவும் மாட்டான்-மு.க.ஸ்டாலின்

Default Image

தமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான்.யாருக்கும் தாழவும் மாட்டான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்த  நிலையில் செப்டம்பர் 20 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதில்,  இந்தி ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த நம்மை அர்ப்பணிப்போம், பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி வழியில் தமிழை காத்திடுவோம்.

தமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான்.யாருக்கும் தாழவும் மாட்டான் என்பதை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் செப்டம்பர்   20- ஆம் தேதி அணிவகுப்போம். வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்