டி.கே.சிவகுமாருக்கு அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு விதிக்கப்பட்டிருந்த அமலாக்கத்துறை காவல் வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான  டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கியது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வந்தது. மேலும் இது குறித்து  அமலாக்கத்துறையும்   வழக்குப் பதிவு செய்திருந்தது.

இதனைதொடர்ந்து  4 நாட்கள் அமலாக்கத்துறை சிவக்குமாரை  செய்து வந்த பின்பு அவரை கைது செய்தது.இந்த  நிலையில் இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிவகுமார் ஆஜர்படுத்தப்பட்டார்.இதில்,டி.கே.சிவகுமாருக்கு விதிக்கப்பட்டிருந்த அமலாக்கத்துறை காவல் வரும் 17ம் தேதி வரை நீட்டித்து  உத்தரவு பிறப்பித்துள்ளது.