சிதம்பரத்தின் ஜாமீன் மனு !சிபிஐ பதில் அளிக்க நோட்டீஸ்

Default Image

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மீது சிபிஐ பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 21-ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.மேலும் காவல் எடுத்து விசாரணை செய்து வந்தது.சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில்தான் சிதம்பரம் தரப்பில் நீதிமன்ற காவலில் வைத்ததற்கு எதிராகவும் ,சிபிஐ கைதுக்கு எதிராகவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது.அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.இந்த விசாரணையில் சிதம்பரத்தின் மனு மீது சிபிஐ 7 நாட்களில்  பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Saidai duraisamy
Carlsen Anna Cramling
Kolkata Knight Riders vs Lucknow Super Giants
tamilisai tvk vijay
sunil gavaskar rohit sharma mi
Chennai High Court tn government