சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்! நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த திட்டம்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தாஹில் ரமாணியை இடமாற்றம் செய்ய கொலிஜியம் அமைப்பானது பரிந்துரை செய்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்து ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அதன் நகலை உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோஹாய் ஆகியோருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த இடம் இடமாற்றத்தை எதிர்த்தும், தாஹில் ரமாணி ராஜினாமாவிற்குஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும். தாஹில் ரமாணி மீண்டும் நீதிபதியாக அமர்ந்து விட வேண்டும் என கூறி வருகின்றனர். நாளை தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025