முதல்ல அவர் அரசியலுக்கு வரட்டும்,அப்பறோம் சொல்றேன் -ரஜினி குறித்து பன்னீர்செல்வம் கருத்து

Default Image

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு அது தொடர்பான கருத்து தெரிவிக்கிறேன் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைமை காலியாக உள்ள நிலையில் அந்த பதவியை நடிகர் ரஜினிகாந்த்  ஏற்பார் என்று தகவல் வெளியாகி வந்தது.ஆனால் ரஜினியின் புதுக்கட்சி பணிகள் வேகமெடுத்து வருகிறது என்று தகவல் வெளியாகியானது.விரைவில்  கட்சியை பதிவு செய்யும் பணிகளை துவங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும்  அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ராசியான ராகவேந்திரா மண்டபத்தையே கட்சி அலுவலகமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் ரஜினியின் அரசியல் குறித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு அது தொடர்பான கருத்து தெரிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்