சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருமகனின் பாஸ்போர்ட் திருட்டு!

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த், கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக தொழிலதிபர் விசாகனை இரண்டாவது திருமணம் செய்தார். இந்நிலையில், விசாகன் வெளிநாடுகளிலும், தனது தொழிலை செய்து வந்தார். இதனால், அவர் அடிக்கடி வெளிநாடு சென்று வருவதுண்டு.

இந்நிலையில், சவுந்தர்யா மற்றும் விசாகன் இருவரும் எமிரேட்ஸ் விமானத்தில் லண்டனுக்கு சென்றுள்ளனர். விசாகன் தனது பாஸ்போட் மற்றும் அமெரிக்க டாலர்களை தனியாக ஒரு பையில் வைத்துள்ளனர். அந்த பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த விசாகன், உடனடியாக இதுகுறித்து விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பின் அவர்கள் அங்குள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர். இதுகுறித்து இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் ரஜினிகாந்தின் மகள் மற்றும் மருமகன் என தெரிந்ததும் இவர்களுக்கு உடனடியாக டூப்ளிகேட் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாஸ்போர்ட் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்