கார் விற்பனை குறைவு- 2 நாட்களுக்கு மாருதி ஆலைகள் மூடல்

Default Image

2 நாட்களுக்கு  மாருதி ஆலைகள் மூடப்படும் என்று மாருதி சுசூகி நிறுவனம்  நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாருதி சுசூகி நிறுவனம் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனம் ஆகும்.இந்த நிறுவனம் உற்பத்தி மட்டுமல்லாது விற்பனையிலும் முன்னிலையில் உள்ள நிறுவனம் ஆகும்.கடந்த சில மாதங்களாகவே ஆட்டோமொபைல் துறை விற்பனையில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் பொருளாதார மந்த நிலை ஆகும்.இதற்கு பணப்புழக்கம் குறைந்தது,ஜிஎஸ்டி வரியால் வாகனங்களுக்கான விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் இந்தியாவின் முக்கிய நிறுவனமான மாருதி ஒரு முக்கிய முடிவு ஒன்றை எடுத்டுள்ளது. கார் விற்பனை குறைவை கருத்து கொண்டு செப்டம்பர் 7 மற்றும் 9-ஆம் தேதி ஹரியானாவில் உள்ள குருகிராம், மானேசரில் உள்ள ஆலைகளில் கார் உற்பத்தி நடைபெறாது என மாருதி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்