ஒரு பொய்யை 100  முறை கூறுவதால் அது உண்மை ஆகாது-பிரியங்கா காந்தி

Default Image

ஒரு பொய்யை 100  முறை கூறுவதால் அது உண்மை ஆகாது என்று  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவுக்கு 5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.இந்த நிலையில் பொருளாதார மந்தநிலை குறித்து  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது  ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அவரது பதிவில், ஒரு பொய்யை 100  முறை கூறுவதால் அது உண்மை ஆகாது.பாஜக ஆட்சியில்,  இந்தியாவில் வரலாறு காணாத மந்தநிலை ஏற்பட்டுள்ளதை  பாஜக ஏற்று கொள்ள வேண்டும்.

பொருளாதார மந்த நிலை அனைவரின்  கண் முன்பு தெரியும்போது, பாஜகவால் எவ்வளவு காலத்திற்கு தலைப்பு செய்திகளை பயன்படுத்தி தப்பிக்க இயலும் என்றும்  கேள்வி எழுப்யியுள்ளார். பொருளாதார இழப்பை சரி செய்ய திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
geetha jeevan About Magalir Urimai thogai
NTK Leader Seeman
vishal nassar karthi
Vijaya prabhakaran - DMDK