கீழடியில் அருங்காட்சியகம் தொடங்க ரூ.3 கோடி நிதி- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

கும்பகோணத்தில்  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழ் ஆர்வலர்கள் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகைப் பொருட்களை காட்சிப்படுத்தும் விதமாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று  கோரிக்கை  விடுத்தது வருகின்றனர். அதற்கான முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ளும்.

மேலும் கீழடியில் மார்ச் மாதத்திற்குள் அருங்காட்சியகம் தொடங்க நடவடிக்கை, இதற்காக ரூ3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கீழடியில் மொத்தம் 142 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.