வடசென்னை இரண்டாம் பாகம் பற்றி மௌனம் கலைத்த அசுரன் தனுஷ்!

நேற்று தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அசுரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், நடிகர் நடிகைகள் மஞ்சு வாரியர், ராட்சசன் அம்மு, ஆடுகளம் நரேன் என பலர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய நடிகர் தனுஷ், ‘வடசென்னை இரண்டாம் பாகம் கண்டிப்பாக தயாராகும். வடசென்னை முதல் பாகத்திற்கு விருது கிடைக்காதது பற்றி பலரும் கேட்டனர். இயக்குனர் வெற்றிமாறனும், நானும் விருதுகளுக்காக படம் எடுக்கவில்லை. அதை எதிர்பார்ப்பதும் இல்லை. இருந்தாலும் சின்ன வருத்தம் இருந்தது. என கூறினார். வடசென்னை படத்தை விட அசுரன் பட கதாபாத்திரம் மிகவும் கவர்ந்தது. இந்த படத்தில் சிவசாமி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், நடிகர் பிரகாஷ்ராஜ் இதில் கௌரவ தோற்றத்தில் அதாவது வக்கீலாக நடித்துள்ளார் என கூடுதல் தகவலையும் தெரிவித்தார்.