போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள்  கோரிக்கைகளை ஆய்வு செய்ய அதிகாரி நியமனம்

Default Image

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள்  கோரிக்கைகளை ஆய்வு செய்ய அதிகாரி நியமனம்  செய்யப்பட்டுள்ளார் .

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது .சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவர்களுடன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.ஆனால்  அரசு மருத்துவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில் அரசு மருத்துவர்கள்  கோரிக்கைகளை ஆய்வு செய்ய அதிகாரி நியமனம்  செய்யப்பட்டுள்ளார் . இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,அரசு மருத்துவர்கள் கோரிக்கை தொடர்பாக செய்ய  ஐஏஎஸ்  அதிகாரி செந்தில் ராஜ் நியமனம்  செய்யப்பட்டுள்ளார் .மேலும் 2 வாரங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்