சிதம்பரம் தலைமறைவாக இருந்தது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலைகுனிவு-அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

சிபிஐ, அமலாக்கத்துறையிடம் ப.சிதம்பரம் முன்பே விளக்கம் அளித்திருக்கலாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் .வழக்கின் காரணமாக தான் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார், இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை.

கைது நடவடிக்கையை தவிர்த்துவிட்டு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையிடம் ப.சிதம்பரம் முன்பே விளக்கம் அளித்திருக்கலாம், அதை அவர் செய்யவில்லை.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்