ப.சிதம்பரத்தை இப்படி கைது செய்தது ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல்! திருமாவளவன் கண்டனம்!

Default Image

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று இரவு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஐஎன்எக்ஸ் நிறுவன ஊழல் முறைகேடு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், ‘ இது பாஜகவின் பழிவாங்கல் நடவடிக்கை. இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சி, காங்கிரஸ் கட்சியை சீர்குலைக்க இந்த நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்துள்ளது.

ப.சிதம்பரத்தை கைது செய்ய அவர் வீடு சுவர் ஏறி, கதவை உடைத்து சிபிஐ அதிகாரிகள் சென்றது ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல். இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனத்தை தெரிவிப்பதாக கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்