பிசிசிஐக்கு தலைமை ஸ்பான்சராக பே டிஎம் …!

மும்பையில் பிசிசிஐயின் தலைமை ஸ்பான்சர் உரிமை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிசிசிஐக்கு  2023-ம் ஆண்டு வரை தலைமை ஸ்பான்சர் பெறுப்பை பே டிஎம் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்திய அணி சர்வதேச போட்டிகள் மற்றும் இந்திய அளவிலான விளையாடும் அனைத்துப் போட்டிகளுக்கும் பே டிஎம் நிறுவனம் ஸ்பான்சர் ஆக இருக்கும். ஐந்து வருடத்தில் பெரும் வெற்றிகளுக்கு வழங்கப்படும் தொகையாக ரூ. 326.80 கோடி முடிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் கடந்த முறை ஒரு போட்டியில் வெற்றி தொகையாக 2.4 கோடி இருந்தது.

தற்போது 58 சதவீதம் உயர்த்தப்பட்டு 3.80 கோடியாக உயர்ந்துள்ளது.இந்த ஒப்பந்தம் குறித்து பிசிசிஐ தலைமை நிர்வாகி ராகுல் ஜோரி  கூறுகையில், பிசிசிஐயின் தலைமை  ஸ்பான்சராக   வருவது மகிழ்ச்சி அடைவதாகவும் , பே டிஎம்  உடன் ஒப்பந்தம் செய்தது பெருமையாக உள்ளதாக கூறினார்.

author avatar
murugan