ஈரோட்டை சார்ந்த ஆர்.ஜெயபாலன் இவர் ஒடிசா மாநிலத்தில் ரூர்கேலாவில் உள்ள என்.ஐ .டி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி மாலினி.இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை.இவர்கள் ரூர்கேலாவில் உள்ள என்.ஐ .டி கல்லூரியில் உள்ள குடியிருப்பில் தங்கி வந்தனர்.
இவர்களுக்கு குழந்தை இல்லாததால் இருவரும் மன வருத்தத்தில் இருந்தனர்.இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக உட்புறமாக பூட்டிய நிலையில் இருந்து உள்ளது.சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தனர்.அப்போது உள்ளே கணவன் , மனைவி இருவரும் விஷம் அருந்தி இறந்து கிடந்தனர்.
உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறை இருவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதை தொடர்ந்து வீட்டில் ஜெயபாலன் எழுதிய ஒரு கடிதம் போலீசார் கைப்பற்றினர்.
அதில் தங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை.குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தங்களின் பெற்றோர்கள் எங்களை மன்னிக்க வேண்டும் என எழுதி இருந்தார்.