சிறுத்தையிடம் சண்டை போட்டு எஜமானியை காப்பாற்றிய நாய் !

Default Image

டார்ஜிலிங்கை  சேர்ந்த அருணா மாலா. இவர் தனது வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாயின் பெயர் டைகர் அருணா வீட்டில் யாரையும் உள்ளே வரவிடாமல் பார்த்துக் கொள்ளும் இந்நிலையில் கடந்த 14-ம் தேதி முதல் மாடியிலிருந்து வீட்டின் முன் பகுதிக்கு அருணா வந்துள்ளார். அப்போது அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று அருணாவை தாக்கியது.

அருணாவின் அலறல்  சத்தம் கேட்டு அங்கு அங்கிருந்து ஓடி வந்த டைகர் சிறுத்தையுடன்  சண்டை போட்டது. பின்னர் சிறிது நேரத்தில் சிறுத்தை ஓடியது. இந்த தாக்குதலில் அருணாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறுத்தையுடன் போராடி எஜமானியை காப்பாற்றிய டைகரை அக்கம் , பக்கத்து வீட்டினர் வந்து அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்