“கொலவெறி” பாடலை பாடி ட்ரெண்ட் செய்த பாண்டியா சகோதரர்கள்!

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 டி20 , 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த மூன்று தொடரிலும் இடம்பெறாத ஹர்திக் பாண்டிய தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.  இந்நிலையில்  2012-ம் ஆண்டு தனுஷ் நடித்த  3 படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது.

இந்த பாடல் மூலம் தனுஷ் மற்றும் அனிருத் ஆகியோர் உலக புகழ் பெற்றனர்.இப்பாடலை இந்திய கிரிக்கெட் வீரர்களான குருணால் பாண்டியா ,ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும்  பாடியுள்ளனர். இவர்கள் இருவரும் செல்போனை பார்த்தபடி ஒய் திஸ் கொலவெறி பாடலை பாடியுள்ளனர்.

அந்த வீடியோவை  தனது ட்விட்டர் பக்கத்தில் குருணால் பாண்டியா பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ  இந்திய ரசிகர் பலரால் பகிரப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

author avatar
murugan