Election Breaking : குறைந்தது திமுக வேட்பாளரின் வாக்குகள் வித்தியாசம்

இன்று வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.காலை முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம்  மற்றும் திமுக வேட்பாளர்  கதிர் ஆனந்த்  மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர்.தற்போது திமுக வேட்பாளர்  கதிர் ஆனந்த்  முன்னிலை பெற்றுள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்:

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம்  –  393242 வாக்குகள்  பெற்றுள்ளார்.

திமுக வேட்பாளர்  கதிர் ஆனந்த்                          –  404044  வாக்குகள்  பெற்றுள்ளார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்   தீபலக்ஷ்மி        –  22003 வாக்குகள்  பெற்றுள்ளார்.

திமுக மற்றும் அதிமுக வேட்பாளருக்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம்  10802 வாக்குகள் ஆகும்.சுமார் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலையில் இருந்து நிலையில் தற்போது  வாக்குகள் வித்தியாசம்  10802 ஆக குறைந்தது .