கனமழை எதிரொலி ! கேரளாவிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

Default Image

கர்நாடகா மற்றும் கேரளாவில் பல்வேறு பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை மகாராஷ்டிரா,கர்நாடக  உள்ளிட்ட மாநிலங்களில்  கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவில் பெய்த கனமழையால் அங்கு உள்ளவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது.ஒரு சில இடங்களில் தற்போதும் மழை பெய்த வண்ணமே இருக்கிறது.கார்நாடகா மற்றும் கேரளாவிலும் மழை தீவிரமாக பெய்யத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,இன்று முதல் கர்நாடகா மற்றும் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளுக்கு  ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.கர்நாடகாவின் குடகு மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்