அறநிலைத்துறை ஆணையர் கவிதா சஸ்பெண்ட் விவகாரம்! மீண்டும் ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Default Image

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோகமிஸ்தர் சிலை செய்வதில் முறைகேடு நடந்தது தொடர்பாக அறநிலைய துறை கூடுதல் ஆணையர் கவிதா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் பணியில் இருந்து பணியிடை நீக்கமும் செய்யப்பட்டிருந்தார். இதற்கு எதிராக கவிதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தரப்பு, கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எதிராக இன்னும் ஆவணங்களை அரசிடம் சமர்ப்பிக்கவில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தற்போது இந்த வழக்கில் , ‘அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக இருந்த கவிதாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட பணி இடைநீக்கம் தொடர்பான உத்தரவை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்.’ என  உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்