ஜம்மு காஷ்மீர் கொடியுடன் , தேசிய கொடி பறந்தது !

Default Image

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நடந்த   மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா , ஜம்மு காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ரத்து எனவும் , ஜம்மு காஷ்மீர் , லடாக் இரண்டும்  யூனியன் பிரதேசமாக மாற்றப்ப்படும்  என அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு இரு அவையிலும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் மசோதாவிற்கு இரு அவையிலும் வாக்கெடுப்பு நடைபெற்றது.  மாநிலங்களவையில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும் ,  எதிராக 61 வாக்குகளும் பதிவாகியது.

மக்களவையில் இந்த  மசோதாவுக்கு ஆதரவாக 351 வாக்குகளும் , எதிராக 72 வாக்குகளும் வாக்களித்தனர். இறுதியாக இந்த மசோதா  மக்களவையிலும் , மாநிலங்களவைலும் இரண்டிலும்  நிறைவேற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீ நகரில்  உள்ள தலைமை செயலகத்தில் ஜம்மு காஷ்மீர்  கொடியுடன் தேசிய கொடி ஏற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதை தொடந்து தேசிய கொடி ஏற்றப்பட்டு உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்