நடப்பாண்டில் புதிதாக 3 சட்டக்கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது-முதலமைச்சர் பழனிசாமி

சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், அரசு திட்டங்களை பற்றி மக்கள் தெரிந்துகொள்ள பொருட்காட்சி பயனுள்ளதாக இருக்கும்.தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள 204 அரசு பொருட்காட்சிகள் மூலம் ரூ39 கோடி லாபம் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் அமராவதி, பவானி, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .மேட்டூர் அணை உபரி நீர் திட்டம் முலம் சேலத்தில் உள்ள ஏரிகள் நிரப்பப்படும்.சேலத்தில் வரும் 14ம் தேதிக்குள் புதிதாக சட்டக்கல்லூரி தொடங்கப்படும், நடப்பாண்டில் புதிதாக 3 சட்டக்கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது என்று பேசினார்.