போன் நம்பருக்காக டெல்லி இளைஞரிடம் மன்னிப்பு கோரிய சன்னி லியோன்! என்னதான் நடந்தது?!

Default Image

பாலிவுட் சினிமாவில் முக்கிய ஹீரோயினாக இருப்பவர் நடிகை சன்னி லியோன். இவர் நடிப்பில் அண்மையில்  அர்ஜுன் பாட்டியாலா எனும் படம் வெளியாகி இருந்தார். இந்த படத்தில் ஒரு காட்சியில் தனது நம்பர் என ஒரு போன் நம்பரை குறிப்பிடுவர். அந்த நம்பரின்  ஒரிஜினல் ஓனர் டெல்லியை சேர்ந்த புனித் அகர்வால் ஆவர்.

இது சன்னி லியோன் நம்பர்தான் என நினைத்த ரசிகர்கள் பலர், தினமும் அந்த இளைஞருக்கு போன் செய்கின்றனராம். தினமும் 100க்கும் மேற்பட்ட கால் வருகிறதாம். இதனால், மன உளைச்சலுக்கு உள்ளானபுனித் அகர்வால் போலீசில் புகார் செய்துள்ளார். விரைவில் நீதிமன்றத்தை நாடவும் உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தை கேள்விப்பட்ட சன்னி லியோன், ஒரு தனியார் ஊடகத்தின் மூலம், அந்த நபரிடம், ‘மன்னிக்க வேண்டும் உங்களுக்கு இப்படி நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ என வருத்தம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்