அமைச்சர் பதவி கொடுப்பதாக 18 எம்.எல்.ஏக்களை ஏமாற்றினார் ஸ்டாலின்-முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி ஆம்பூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் கூறுகையில், எந்த அவதாரம் எடுத்தாலும் ஆட்சியை கலைக்க முடியாது. ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மறந்து விடுங்கள், எந்த காலத்திலும் ஆட்சியை கலைக்க முடியாது.

அமைச்சர் பதவி கொடுப்பதாக 18 எம்.எல்.ஏக்களை ஏமாற்றினார் ஸ்டாலின், இப்போது 18 பேரும் வீதியில் நிற்கின்றனர். திமுக எது செய்தாலும் அதிமுக அஞ்சாது.

சட்டம், ஒழுங்கு பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை, சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம் என்று தெரிவித்தார்.