சதுரகிரி கோவில் கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி 4 பேர் பலி!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் அமாவாசை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்த வருடம் ஆடி மாதம் அமாவாசை திருவிழா நேற்று மிக சிறப்பாக நடைபெற்றது. இக்கோவிலுக்கு கடந்த 27-ம் தேதி முதல் இன்று வரை செல்ல அனுமதி கொடுக்கப்பட்டு இருத்தது.

நேற்று நடந்த ஆடி மாதம் அமாவாசை திருவிழாவில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்நிலையில் நேற்று திருவிழாவில் கலந்து கொண்ட முருகேசன் ,சுசீலா ,ராஜசேகர்  உட்பட நான்கு பேர் கூட்ட நெரிசல் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக காவல் துறை சார்பில் கூறப்பட்டு உள்ளது.

author avatar
murugan